பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவிருக்கிற விழாவுக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு வந்துள்ளது. மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு அவரை மட்டும் ஊடக நிறுவனங்கள் முன்னிலைப்படுத்துவது ஏன்?இதுதான் பிம்பம் கட்டுகிற வேலை. மோடிக்கும் இதேபோல் பிம்பக் கட்டுமான வேலையைத்தான் பல கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் செய்தன. தமிழகத்தில் ரஜினிபிம்பம் கட்டுகிற வேலையை ஏற்கெனவே தொடங்கிவிட்ட ஊடக நிறுவனங்கள் இப்போதும் அதைத் தொடர்கின்றன. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசியது; மீத்தேன், கார்பன் ஹைட்ரேட், நீட் போன்ற விஷயங்களில் அந்த எதிர்ப்பு அலை ஏற்பட்டது, அப்படி ஒரு எதிர்ப்பு அலை வீசும்போது அதை எதிர்த்து நிற்க முடியாது என்று, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறாததற்கான காரணத்தைச் சொல்கிறார் ரஜினி. உண்மைதான். ஆனால் அந்த அலையில் இவர் எந்தப் பக்கம்? அலையோடு நிற்கிறாரா, அலையை எதிர்த்து நிற்கிறாராஅல்லது கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறாரா?நரேந்திர மோடி ஒரு சரிஸ்மாட்டிக் தலைவர் என்று ரஜினி செய்தியாளர்களிடம் சொன்னது பற்றிக் கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜக பெற்ற வாக்குகள் மொத்தம் 37.3 சதவீதம்தான். இதுவரை மத்திய ஆளும் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்திலேயே மிக அதிகம் பாஜகவுக்கு கிடைத்திருக்கிற இந்த 37.3 சதவீதம்தான் என்று ‘தி இந்து’நாளேடும் பல தேர்தல் ஆய்வு அமைப்புகளும் கூறியுள்ளன.ஆக 62.3 சதவீத வாக்காளர்கள் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள். அந்தப் பெரும்பான்மை எதிர்ப்பலையைத் தமிழகம் போல ஒரே சக்தியாக திரட்டுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்த பலவீனத்தைத்தான் பாஜக அறுவடை செய்திருக்கிறது. கேள்வி என்னவென்றால் 62.3 சதவீத வாக்காளர்களை ஈர்க்க முடியாதவர் எப்படி ஒரு சரிஸ்மாட்டிக் தலைவராக முடியும்? அப்படிச் சொல்வதன் மூலம் அந்த 62.3 சதவீத மக்களை இவர் இன்சல்ட்செய்கிறார் என்று கூடச் சொல்லலாம்.தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டுத் தலைமையாக உருவானதுதான் ஆரோக்கியமான சரிஸ்மாட்டிக் அம்சம். இந்தியாவுக்கே முன் உதாரணமாக வந்திருக்கிற அம்சம்.
அ.குமரேசன்
******
தோழர் ஸ்டாலின் கூறினார்...
தோழர்களே! புயல் வீசுகிற நாட்களில்அலை கொழிக்கும் கடலிலேநீீங்கள் எப்போதாவது படகிலே சென்றதுண்டா? நான் பயணித்திருக்கிறேன். பாய்மரங்கள் பறந்துவிடும். படகில் சிறு ஓட்டைவிழுந்து விடும். படகு ஆடி நிலை கொள்ளாமல் எந்த நேரமும் கவிழும் நிலை!அப்போது படகில் இருப்பவர்களுக்குள் மூன்று கருத்துக்கள் வரும். முதல் கருத்து- இனி அவ்வளவுதான், அனைவரும் மண்டியிட்டு தோத்திரம் சொல்லுங்கள், கடவுள்காப்பாற்றுவாரா பார்க்கலாம். இது சரணாகதிப் பாதை.இரண்டாவது கருத்து- தோழர்களே இனிபடகை நம்பக்கூடாது. எந்த நேரமும் கவிழும். எனவே அனைவரும் நடுக்கடலானாலும் பரவாயில்லை. கடலில் குதித்து நீந்திக் கரை சேரமுடியுமா என்று பார்ப்போம்என்பர். இதுதான் அதிதீவிர தற்கொ லைப்பாதை.மூன்றாவது கருத்து- தோழர்களேஓட்டைகளை அடையுங்கள். பாய்மரக்கட்டைகளை இழுத்துக்கட்டுங்கள். துடுப்புகளை எடுத்து நமது பலம் முழுவதையும் திரட்டி படகை முன்னோக்கி கரை நோக்கிசெலுத்துங்கள். மனஉறுதியுடன் செயல்பட்டால் கரை யேறுவது கடினமல்ல.மூன்றாவது கருத்தே மார்க்சிய - லெனினியக் கருத்தாகும்.
-எஸ்ஏபி